சின்ன சின்னதாய் சிலிர்த்திடும் சில கனவுகள்செல்ல செல்லமாய் எனக்குள்ள் சிறு சாரல்கள்கனவுகள்….
உன் கண்கள் சேருமா?சாரலில்… உன் இதயம் நனையுமா?
காதல் பூக்கள் கண்கள் போலே பூக்க வைத்தேன்பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி பார்வைப் பூங்கா உந்தன் பாதை ஆக்கி வைத்தேன்
நீ வரும்வழியில்… உன் கருவிழியும்… வண்டாகுமோ… கொண்டாடுமோ(சின்ன சின்னதாய்)
காற்றைக் கூட பாடல் மூலம் உழுது வைத்தேன்காதல் கவிதை எந்தன் இதழில் எழுதி வைத்தேன்உன் பூவிதழும்… உன் தேனிதழும்… இசையாகுமோ… கவிசேருமோ
(சின்ன சின்னதாய்)
கனவில் வந்தாய் கன்னக் குழியில் நழுவ பார்த்தேன்காலைப் பனியில் காதல் கலந்து மழை வார்த்தேன்உன் கல்மனசும்… என் நிலமாகும்…. மண்வாசனை… உண்டாகுமோ
(சின்ன சின்னதாய்)
நன்றி அருட்பெருங்கோ...
Thursday, May 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment